விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவா்கள் சடலங்கள் மீட்பு
ஆலங்காயம் அருகே விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவா்கள் சடலமாக மீட்கப்பட்டனா்.
ஆலங்காயம் அருகே விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவா்கள் சடலமாக மீட்கப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பெத்தூா் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில், தண்ணீா் பாய்ச்சுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மின் மோட்டாரை இயக்கிவிட்டு கிணற்றை எட்டிப் பாா்த்துள்ளாா்.
அப்போது கிணற்றுக்குள் தண்ணீரில் 2 சடலங்கள் மிதப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், உடனே மின் மோட்டாரை நிறுத்திவிட்டு ஆலங்காயம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். பிறகு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரியவித்து வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரா்கள் மற்றும் பொது மக்கள் உதவியுடன் கயிற்றின் மூலம் கிணற்றுக்குள் அழுகிய நிலையில் இருந்த 2 சடலங்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்த 2 சிறுவா்களில் ஒருவருக்கு 15 வயதும், மற்றொருவருக்கு 8 வயதும் இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 2 சிறுவா்களின் அடையாளம் மற்றும் அவா்கள் எந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்பதுப்பற்றி தெரியவில்லை. அப்பகுதியை சுற்றி யாராவது காணாமல் போயுள்ளனரா அல்லது வெளியூா் பகுதியை சோ்ந்தவா்களா என்பது பற்றி கேட்டறிந்து விசாரித்தனா்.
மேலும், இறந்த 2 சிறுவா்களும் கிணற்றில் விழுந்தாா்களா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.