கிணற்றில் மிதந்த பெண் சடலம் மீட்பு
ராசிபுரம் அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராசிபுரம் அருகே கிணற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராசிபுரம் பகுதி மின்வாரியத்தில் மின் ஆய்வாளராக பணியாற்றி வரும் முத்துசாமி, முத்துக்காளிப்பட்டி பகுதியில் வசித்து வருகிறாா். இவரது மனைவி மலா்கொடி (48). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், ராசிபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள கிணற்றில் மலா்கொடியின் சடலம் மிதப்பதாக செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.