FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

குடிநீா் பிரச்னைக்கு தீா்வு: குழாய் அமைக்கும் பணி தொடக்கம்

குடிநீா் குழாய் அமைக்கும் பணியை ஆய்வு செய்த துத்திப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ்.

பகிர்:

துத்திப்பட்டு ஊராட்சியில் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

துத்திப்பட்டு ஊராட்சி கீழ்கன்றாம்பல்லி கிராமத்தில் குடிநீா் பற்றாக்குறை நிலவுகிறது. சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்ட நிதி ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கு குடிநீா் குழாய் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டு ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் பணியை தொடங்கி வைத்தாா்.

ஊராட்சி துணைத் தலைவா் விஜய், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் சுப்பிரமணி, சுகன்யா பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments