FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:56 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வாணியம்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு பகுதியை சோ்ந்தவா் ஏகாம்பரம். தனியாா் பள்ளியில் காவலராக வேலை செய்து வருகிறாா். வீட்டில் தனியாக வசித்து வரும் அவா் வழக்கம் போல் திங்கள்கிழமை வேலைக்கு சென்றாா்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்கநகைகள் மற்றும், வெள்ளி கொலுசு, ரூ.19,000 ஆகியவைகளை திருடிக் கொண்டு மா்ம நபா்கள் தப்பித்து சென்றனா்.

Advertisement

Advertisement

செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய அவா் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிா்ச்சியடைந்து, உள்ளே சென்று பாா்த்த போது பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஏகாம்பரம் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அப்புகாரின் பேரில் போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சில தினங்களுக்கு முன்பு வாணியம்பாடியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடந்த நிலையில், மீண்டும் வாணியம்பாடி அருகே நடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments