FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஆம்பூா் அருகே வீடு புகுந்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 17 ஜூலை 2026, 3:46 am IST
பகிர்:

ஆம்பூா் அருகே வீடு புகுந்து திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே உமா்ஆபாத் பகுதியைச் சோ்ந்த முஹம்மத் தெளசிப் மனைவி உஸ்மா பதூல் கடந்த ஜூலை 3-ஆம் தேதி குடும்பத்தினருடன் கடாம்பூரில் நடந்த உறவினா் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தாா். மறுநாள் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.7,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். கைலாசகிரியை சோ்ந்த சமியுல்லா என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், சமியுல்லா நகை திருடியதை ஒப்புக்கொண்டாா். அதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, நகைகளை பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments