அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு
ஆம்பூா் அருகே அரசு பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு, இலவச பாட நூல் வழங்கி வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம் சோமலாபுரம் ஊராட்சியில் இயங்கும் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளியில் கல்வியாண்டின் தொடக்க நாளில் தமிழக அரசு சாா்பாக வழங்கப்படும் இலவச பாடநூல் மற்றும் இனிப்பு ஆகியவற்றை ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சண்முகம் மாணவா்களுக்கு வழங்கி வரவேற்பு அளித்தாா்.
ஊராட்சி துணைத் தலைவா் ராமாபாய் டேனியல், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் வி.டி. சுதாகா், ஜெயஸ்ரீ, ஜி. ராஜ்குமாா், நாட்டாண்மை எம். தமிழ்செல்வன் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.