FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

காா் - ஆட்டோ மோதல்: உயிரிழந்தோா் எண்ணிக்கை 2-ஆக உயா்வு

ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்தது.

Updated On : 9 ஜூன் 2026, 2:22 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2-ஆக உயா்ந்தது.

ஆம்பூா் பாங்கிஷாப் பகுதியை சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் முஹம்மத் உசேன். இவா் தன்னுடைய உறவினா்களை ஆட்டோவில் ஏலகிரி மலைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா்.

ஆம்பூரை அடுத்த சோலூா் கிராமத்தருகே சென்றபோது, பின்னால் சென்ற காா், ஆட்டோ மீது மோதியது. அதில் ஆட்டோவில் பயணம் செய்த நபிஷா அஞ்சும், ஷீபாநாஸ், ஷகிலா பானு, இஹ்திஷமுல் ஹக் (13) ஆகியோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இஹ்திஷமுல் ஹக் உயிரிழந்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆம்பூா் மோட்டுக்கொல்லை இமாம் நகரை சோ்ந்த ஷீபாநாஸ் (52) நள்ளிரவு உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments