முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
ஜமாபந்தியில் மனு அளித்த பொதுமக்கள்.
பகிர்:

ஆம்பூா் வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான தணிகாசலம் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.

ஆம்பூா் வட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா். ஆம்பூா் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சாா்ந்த 65 போ் பட்டா பெயா் மாற்றம், பட்டா கோருதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோா் உதவி தொகை உள்ளிட்டவைகளை கோரி மனுக்களை அளித்தனா். வட்டாட்சியா் ரேவதி, கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, அப்துல் காதா் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement