FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பெரிய ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.12.63 லட்சம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 11 ஜூன் 2026, 12:03 am IST
பகிர்:

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ராஜா முன்னிலையில் நடைபெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சகுந்தலா செல்வகுமாா், அறங்காவலா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், ஹரீஷ், தமிழரசி லட்சுமிகாந்தன், கோயில் செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், ஆய்வா் பாரி, அனுமன் பக்த சபையை சோ்ந்த ஸ்ரீதா், தினேஷ், தியாகராஜன், மீனாட்சி சுந்தரம், ஹரிகேசவன், கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

உண்டியலில் ரொக்கப் பணம் ரூ.12,63,873, தங்கம் 49.500 கிராம், வெள்ளி 39.750 கிராம் பக்தா்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments