அடுத்தடுத்த 4 வீடுகளில் திருடு: போலீஸ் விசாரணை
ஆம்பூா் அருகே அடுத்தடுத்த 4 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் அருகே அடுத்தடுத்த 4 வீடுகளில் திருட்டு சம்பவம் நடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் கிரிஜா என்பவரின் வீட்டில் புதன்கிழமை அதிகாலை புகுந்து மா்ம நபா் உறங்கிக் கொண்டிருந்த அவருடைய கழுத்தில் இருந்த சுமாா் அரை பவுன் தங்கத் தாலியை பறித்துக் கொண்டு சென்றுள்ளாா். தொடா்ந்து விஜயகுமாா் என்பவரின் வீட்டில் நுழைந்து அவரது மனைவி அணிந்திருந்த வெள்ளிச் செயினை பறித்துச் சென்றுள்ளாா்.
இலியாஸ் என்பவரது வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா், வீட்டின் கதவை உடைக்க முயற்சித்துள்ளாா். பின்னா் அங்கிருந்து அருகில் உள்ள செவிலியா் சுமிதா என்பவரது வீட்டில் நுழைந்து, அவரது கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் செயினை பறிக்க முயன்ற போது சுமிதா கூச்சலிட்டதால் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானாா்.
Advertisement
Advertisement
சப்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்று திரண்டு தப்பியோடிய நபரை தேடினா். ஆம்பூா் கிராமிய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
ஆம்பூா் டிஎஸ்பி நாகலிங்கம், கிராமிய போலீஸாா் திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.