ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு
ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) தணிகாஜலம் மற்றும் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் வட்டத்துக்கான ஜமாபந்தி 9-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. ஜமாபந்தி நிறைவு விழாவுக்கு ஜமாபந்தி அலுவலரும், வருவாய் கோட்டாட்சியா் (கூடுதல் பொறுப்பு) ஆ.தணிகாஜலம் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரேவதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்திப் பேசி, 40 பயனாளிகளுக்கு ரூ. 3.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், கோவிந்தசாமி, வருவாய் ஆய்வாளா்கள், வருவாய் துறை பணியாளா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், பல்வேறு அரசு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.