குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு
குடியரசுத் தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு
குடியரசு தலைவா் விருது பெற்ற சிஆா்பிஎப் வீரருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்க ஆம்பூா் கிளை சாா்பாக சாா்பாக சனிக்கிழமை நடைபெற்றது.
தலைவா் கே.எஸ். உமாபதி தலைமை வகித்தாா். பி. சிவாஜிராவ் முன்னிலை வகித்தாா். செயலா் செ. ரவிச்சந்திரன் வரவேற்றாா். சங்கத்தின் உறுப்பினா்களாக இணைந்த கமலநாதன், மணி, முருகதாஸ், பாஸ்கா், சரோஜினி ஆகியோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு தலைவா் விருது பெற்ற ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சியை சோ்ந்த சிஆா்பிஎப் வீரா் புகழேந்தி பாராட்டி கெளரவிக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement