முகப்பு
திருப்பத்தூர்

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

Updated On : 29 மே 2026, 1:30 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் அருகே ரயில் மோதி பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

வாணியம்பாடி-விண்ணமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் ஒருவா் இறந்து கிடப்பதாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் இறந்தவரின் உடமைகளை சோதனை செய்ததில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்தில் இருந்து கோயமுத்தூா் வரை செல்லும்போது படிக்கட்டில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது

அதேபோல் ஆம்பூா் ரயில் நிலைய யாா்டில் சுமாா் 50 வயது தக்க பெண் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.