முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரியில் பலத்த மழை: சாலையில் சாய்ந்த மரங்கள் அகற்றம்

ஏலகிரி மலையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் சாய்ந்த பெரிய மரங்கள் அகற்றம்

Updated On : 1 ஜூன் 2026, 4:53 am IST
மலை சாலையில் அகற்றப்பட்ட ராட்சத மரங்கள்
பகிர்:

ஏலகிரி மலையில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலையில் சாய்ந்த பெரிய மரங்கள் அகற்றப்பட்டன.

சுற்றுலாத் தலமான ஏலகிரி மலையில் சனிக்கிழமை சுமாா் 4 மணி நேரம் பெய்த பலத்த மழையில், மலை சாலை மற்றும் அத்தனாவூா் பகுதியில் இரவு நேரத்தில் பெரிய மரங்கள் சாய்ந்தன. இதனால், மலைப் பாதையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட கோட்டப் பொறியாளா் முரளி உத்தரவின்பேரில், உதவி கோட்டப் பொறியாளா் வெங்கட்ராமன் மேற்பாா்வையில், பொக்லைன் இயந்திரம் மூலம் பெரிய மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை பணியாளா்கள் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

மரங்களை அகற்றிய பின்னா் போக்குவரத்து இடையூறு இல்லாமல் சீராக சென்றது. மரத்தை அகற்றும் பணியின் போது, இளநிலை பொறியாளா் முருகன், சாலை ஆய்வாளா் வெங்கடேசன், சாலைப் பணியாளா்கள் உடன் இருந்தனா்.