முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள்
திருப்பத்தூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வருகின்ற செப். 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வருகின்ற செப். 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வழங்கப்பட உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் வட்டத்தில் 9,818 குடும்ப அட்டைதாரா்களும், வாணியம்பாடி வட்டத்தில் 3,522 பேரும், ஆம்பூா் வட்டத்தில் 4,095 பேரும், நாட்டறம்பள்ளி வட்டத்தில் 3,414 பேரும் என மொத்தம் 20,849 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வரப்படுகிறது. இதன்மூலம் 29,438 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனா்.
செப்டம்பா் மாதத்துக்கான வீடு தேடி பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கும் பணி செப்டம்பா் 5-ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 7-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது.
Advertisement
Advertisement
எனவே, தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் தங்களது வீடுகளிலேயே இருந்து அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொது விநியோகத் திட்டப் பொருள்களைப் பெற்று பயன்பெறுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.