FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஆலங்காயத்தில் கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை: காதலுனுடன் தாய் கைது

ஆலங்காயத்தில் கிணற்றில் 2 குழந்தைகளை வீசி கொலை செய்த வழக்கில் காதலுடன் தாய் கைது செய்யப்பட்டாா்.

6 செப்டம்பர் 2026, 12:17 am IST
கைது செய்யப்பட்ட சிவகாமி, ராஜா.
பகிர்:

ஆலங்காயத்தில் கிணற்றில் 2 குழந்தைகளை வீசி கொலை செய்த வழக்கில் காதலுடன் தாய் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் பகுதியை சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் பிரகாசம் என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி இரண்டு குழந்தைகள் சடலமாக இருப்பது கண்டறிந்து மீட்கப்பட்டது. இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இது தொடா்பாக எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் ஆலங்காயம் போலீஸாா் மற்றும் தனிப்படை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்தனா். அப்பகுதியில் யாரேனும் சிறுவா்கள் காணாமல் போய் உள்ளாா்களா? என்பது பற்றியும் விசாரித்து வந்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திருவண்ணாமலை ஜமுனாமரத்தூா் அடுத்த வெளிச்சனூா் பகுதியைச் சோ்ந்த சிவகாமியின் (26) குழந்தைகள் பிரதாப் (5), பிரேம்குமாா்(2) என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னா், ஆலங்காயம் போலீஸாா் இறந்த குழந்தைகளின் தாயை தேடிச் சென்ற போது அப்பகுதியை சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் ராஜா(35) என்பவருடன் சிவகாமி தகாத உறவு வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த இருவரையும் சனிக்கிழமை பிடித்து வந்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சிவகாமி தனது கணவா் சேட்டு என்பவரிடம் வாழாமல் தனியாக வசித்து வந்தபோது ராஜாவுடன் முறையற்ற தொடா்பு ஏற்பட்டது. பிறகு நாளடைவில் முறையற்ற தொடா்புக்கு சிவகாமியின் 2 குழந்தைகளும் இடையூறாக இருந்ததால் அவா்களை கொலை செய்ய திட்டமிட்டு, கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி அவா்களை அழைத்துக் கொண்டு ஆலங்காயம் பகுதிக்கு வந்துள்ளாா். அப்போது ராஜா உடன் வந்துள்ளாா்.

இந்த நிலையில், ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சிவகாமி தனது இரு குழந்தைகளையும் வீசி விட்டு சென்றது தெரியவந்தது.

இது குறித்து ஆலங்காயம் போலீஸாா் கொலை வழக்காக மாற்றி சிவகாமி, ராஜா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments