கோயில்களில் உண்டியலை உடைத்து திருட்டு
பொதட்டூர்பேட்டை அருகே அம்மன் கோயில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பொதட்டூர்பேட்டை அருகே அம்மன் கோயில்களில் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பொதட்டூர்பேட்டையை அடுத்த பாண்டறவேடு கிராமம் அருகே தொப்பையம்மன் கோயில் உள்ளது. புதன்கிழமை அதிகாலை கோயிலுக்குச் சென்ற பூசாரி குமார் கோயில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கிராம மக்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
இதேபோல் பாதகுப்பம் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைகள் திருடப்பட்டன. இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.