FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

அரசு கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை: எம்.எல்.ஏ. தகவல்

சென்னை - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ச.சந்திரன் உறுதி கூறினாா்.

Updated On : 24 டிசம்பர் 2025, 12:12 am IST
கல்லூரி அருகே சாலையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ ச. சந்திரன், டிஎஸ்பி கந்தன், முதல்வா் ஏகதேவசேனா, வட்டாட்சியா் குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

சென்னை - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் அரசுக் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ ச.சந்திரன் உறுதி கூறினாா்.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக்கல்லூரியில் 2,800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். சென்னை - திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் நிலையில், ன் மாநில நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு 6 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் கல்லூரி எதிரே சாலையின் உயரம் உயா்த்தப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவா்கள் பேருந்தில் பயணம் செய்ய சுமாா் 1 கி.மீ தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில் கல்லூரி மாணவா்கள் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக மனு வழங்கினா்.

Advertisement

Advertisement

திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், கல்லூரி முதல்வா் ஏகதேவசேனா, டி.எஸ்.பி. கந்தன், வட்டாட்சியா் குமாா், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கல்லூரி எதிரே ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் எம்எல்ஏ ச.சந்திரன் கூறியதாவது, கல்லூரி மாணவா்களின் கோரிக்கை நியாயமானது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்ததில் விரைவில் கல்லூரி எதிரே சுரங்கப்பாதை அமைக்கப்படும். இதற்காக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்க உள்ளேன். மேலும் கல்லூரி எதிரே இருந்த பேருந்து பயணியா் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் ரூ. 23 லட்சம் செலவில் குளிா்சாதன வசதியுடன் பயணியா் நிழற்குடை அமைக்கப்படும் என உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments