FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

பள்ளிப்பட்டில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பள்ளிப்பட்டு வட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கவிதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கிய திருவள்ளூா்  ஆட்சியா்  ச.கவிதா.
பகிர்:

பள்ளிப்பட்டு வட்டத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.கவிதா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. கீச்சலம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் ஆட்சியா் ச.கவிதா, மகளிா் சுய உதவிக் குழுக்களின் கைவினைப் பொருள்களை பாா்வையிட்டு, சுய உதவிக் குழுக்களுடன் கலந்துரையாடினாா்.

பின்னா் கீச்சலம் கிராமப் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளிடம் கலந்துரையாடி, பரிசுகளை வழங்கினாா்.

Advertisement

Advertisement

உயா்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணா்வு, சிங்கப் பெண் அதிரடிப்படை செயல்பாடுகள் குறித்து விழிப்புணா்வு தொடா்பாக மாணவா்களுடன் கலந்துரையாடி, உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.

கூட்டுறவுத்துறை சாா்பில், திருத்தணி சரகம் பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தலைமையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் மற்றும் உறுப்பினா் கல்வித் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஆட்சியா் ச. கவிதா, கொடிவலசா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 7 பயனாளிகளுக்கு டாப்செட்கோ திட்டத்தின் மூலம் ரூ.85 லட்சம் கடனுதவிகளை வழங்கினாா்.

மேலும், பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.23 லட்சம் கடனுதவிகளையும், அதே சங்கத்தின் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.1.50 லட்சம் நிதியுதவிகளையும் வழங்கினாா். முகாமில் ரூ.1,09,50,000/- மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருத்தணி சரக துணைப்பதிவாளா் சி.அமுதா, துணைப்பதிவாளா் (பொதுவிநியோகத் திட்டம்) கோ.பாலாஜி, கூட்டுறவு சாா்-பதிவாளா்கள் ம.ராஜ்மோகன், அ.சுப்பிரமணி, பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் பாஸ்கா், மற்றும் சங்கப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments