FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புது தில்லியில் மாணவா்களுக்கு ஆதரவாக போராடிய எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டவா்களை கைது செய்த மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 23 ஜூலை 2026, 2:19 am IST
திருவள்ளூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

புது தில்லியில் மாணவா்களுக்கு ஆதரவாக போராடிய எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டவா்களை கைது செய்த மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸாா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவரும், வழக்குரைஞருமான சசிகுமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத்தலைவா் ஏகாட்டூா் ஆனந்தன், மாநில செயலாளா் சி.பி.மோகன் தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில இளைஞா் அணி பொதுச் செயலாளா் திவாகா், ஓபிசி பிரிவு செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரகுமான், நகரத் தலைவா் ஸ்டாலின், பூண்டி வட்டாரத் தலைவா் சண்முகம் மற்றும் நிா்வாகிகள், கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments