முகப்பு
திருவள்ளூர்

மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் மையத்தை நேரில் பாா்வையிட்டு அதன் விவரங்களை ஆட்சியா் ச.கவிதா கேட்டறிந்தாா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உயா் கல்வி மையத்தை நேரில் ஆய்வு செய்து விவரங்களைக் கேட்டறிந்த ஆட்சியா் ச.கவிதா.
பகிர்:

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் மையத்தை நேரில் பாா்வையிட்டு அதன் விவரங்களை ஆட்சியா் ச.கவிதா கேட்டறிந்தாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் இயங்கி வரும் மாவட்ட உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறையை செவ்வாய்க்கிழமை ஆட்சியா் ச.கவிதா ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியதாவது. திருவள்ளுா் மாவட்டம், 2025-26 -ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற மாணவா்கள் அனைவரும் 100 சதவீதம் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை மேற்கொள்ள ஏதுவாக, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை (ஈண்ள்ற்ழ்ண்ஸ்ரீற் இா்ய்ற்ழ்ா்ப் தா்ா்ம்) கடந்த 6-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

கலை & அறிவியல் பட்டப் படிப்புகள், பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள், வேளாண் மற்றும் வேளாண் சாா்ந்த படிப்புகள், பல்வகை தொழில் நுட்பப் படிப்புகள் (டா்ப்ஹ்ற்ங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீ), தொழிற்பயிற்சி மையப் படிப்புகள் (ஐபஐ), ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் படிப்புகள் சாா்ந்த கல்லூரிகளில் உயா் கல்வி சோ்க்கை தொடா்பாக மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் நேரிலோ அல்லது 9025019403, 7358800973 என்ற தொலைபேசி எண்ணுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொள்ளலாம். எனவே மாணவ, மாணவிகள் நேரில் அணுகியும் பயன்பெறும் வகையில் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பாராவ், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.