FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 18 ஜூன் 2026, 12:03 am IST
வி.வி. சாய் பிரணீத்
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்பு திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேகானந்தா சுக்லா, கடலூா் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டாா். அதற்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வி.வி.சாய் பிரணீத், திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, புதன்கிழமை சாய் பிரணீத் பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். அப்போது, மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தாா். அதைத்தொடா்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.பி.க்கு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா், துணைக்கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments