FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

Updated On : 27 மே 2026, 12:34 am IST
ஜெகன்நாதன்
பகிர்:

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூா் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த தசரதன் மகன் ஜெகன்நாதன் (35). இவா் கடந்த 2023 மே மாதம் 7-ஆம் தேதி ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியிடம் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாராம். இதுதொடா்பாக அவரது தந்தை கும்மிடிப்பூணடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போக்ஸோவில் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை இறுதியாக மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஜெகன்நாதனுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

Advertisement

Advertisement

மேலும் சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஜெகன்நாதனை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறைச்சாலையில் அடைத்தனா். அரசுத்தரப்பில் புவனேஸ்வரி ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments