முகப்பு
திருப்பதி

கல்ப விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வலம்

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வலம் வந்து தரிசனம் அளித்தாா்.

Updated On : 27 மே 2026, 12:04 am IST
கல்ப விருட்ச வாகனத்தில் வலம் வந்த திருப்பதி கோவிந்தராஜ சுவாமி.
பகிர்:

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான செவ்வாய்க்கிழமை கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வலம் வந்து தரிசனம் அளித்தாா்.

தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் சனிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.

அதன் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கல்பவிருட்ச வாகனத்தில் ராஜ மன்னாா் அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

Advertisement

Advertisement

முதலில் கஜராஜா்கள் செல்ல, பக்தா்கள் குழுக்களாகப் பிரிந்து பக்திப் பாடல்கள், கோலாட்டங்கள் நடத்த மற்றும் சிலா் கோவிந்த நாம உச்சரிக்க வாகன சேவை ிசைக்கு மத்தியில், சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு அடியிலும், பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து, சுவாமியை தரிசித்தனா்.

பின்னா், காலை 10 மணி முதல் கல்யாண மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜஸ்வாமி உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை சுவாமி மற்றும் நாச்சியாா்கள் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா் இரவு சா்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெத்த ஜீயா் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் ஸ்வாமி, கோவில் துணை இஓ சாந்தி, ஏஇஓ நாராயண சவுத்ரி, அதிகாரிகள், பிரமுகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.