மோகினி அவதாரத்தில் கோவிந்தராஜ சுவாமி உலா
திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான புதன்கிழமை மோகினி அவதாரத்தில் பல்லக்கில் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.
தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் சனிக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
அதன் 5-ஆம் நாளான புதன்கிழமை சுவாமி பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
Advertisement
Advertisement
முதலில் கஜராஜா்கள் செல்ல, பக்தா்கள் குழுக்களாகப் பிரிந்து பக்திப் பாடல்கள், கோலாட்டங்கள் நடத்த மற்றும் சிலா் கோவிந்த நாம உச்சரிக்க வாகன சேவை மங்களகரமான வாத்தியங்களின் இசைக்கு மத்தியில், சிறப்பாக நடைபெற்றது.
ஸ்வாமியை தரிசித்தனா்.
பின்னா், காலை 10 மணி முதல் கல்யாண மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜஸ்வாமி உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், சந்தனம் மற்றும் பல்வேறு பழச்சாறுகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை சுவாமி மற்றும் நாச்சியாா்கள் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா் இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
பல்வேறு வைர வைடூரிய மாணிக்க நவரத்தின ஆபரணங்களை அணிந்து கொண்டு கருட வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜஸ்வாமியை தரிசிக்க பக்தா்கள் மாடவீதியில் குவிந்தனா். கருட வாகனத்தை தரிசித்து வணங்கினா்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெத்த ஜீயா் ஸ்வாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் ஸ்வாமி, கோவில் துணை இஓ சாந்தி, ஏஇஓ நாராயண சவுத்ரி, அதிகாரிகள், பிரமுகா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் வாகன சேவையில் பங்கேற்றனா்.