விவசாயி வீட்டில் 10 பவுன் நகை, ரூ.62 ஆயிரம் திருட்டு
செய்யாறு அருகே விவசாயி வீட்டில் 10 சவரன் நகை, ரொக்கப் பணம் ரூ.62 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
செய்யாறு அருகே விவசாயி வீட்டில் 10 சவரன் நகை, ரொக்கப் பணம் ரூ.62 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
செய்யாறை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. விவசாயியான இவர், புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு நிலத்திற்கு சென்று உள்ளார்.
இவரது மனைவி ஏரி வேலைக்கு சென்றதாகத் தெரிகிறது. மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்து உள்ளது.
மேலும், பீரோவும் திறந்த நிலையிலும், அதில் வைத்திருந்த 10 பவுன் நகை, ரொக்கப் பணம் ரூ. 62 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.