ஆண்களுக்கான கருத்தடை விழிப்புணர்வு முகாம்
பெரணமல்லூரில் ஆண்களுக்கான நவீன கருத்தடை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
பெரணமல்லூரில் ஆண்களுக்கான நவீன கருத்தடை குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
பெரணமல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இந்த சிறப்பு விழிப்புணர்வு முகாமுக்கு மருத்துவர் ஷீஜி தலைமை வகித்தார்.
வட்டார புள்ளியல் நல அலுவலர் (குடும்ப நலம்) மனோகரன் முன்னிலை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் கலந்துகொண்டு திருமணமான ஆண்களுக்கு என சிறப்பு நவீன கருத்தடை குறித்து பேசினார். முகாமில் ஆண்கள், பெண்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.