பள்ளியில் மரக்கன்று நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, வந்தவாசியை அடுத்த பாதிரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ப.நாராயணன் தலைமை வகித்தார். அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் வே.சுரேஷ், த.மார்க்ரெட் ஆகியோர் மரம் நடுவதன் அவசியம் குறித்துப் பேசினர்.
விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.