FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

கிராம உதவியாளர்கள்  சங்கத்தினர் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2018, 9:26 am IST
பகிர்:

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள் நெற்றியில் பட்டை நாமம் அணிந்து பங்கேற்றனர். 
போராட்டத்துக்கு கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பிரபாகரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டப் பொருளர் அ.பெ.வெங்கடேசன் பேசினார்.
கிராம உதவியாளர்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.பச்சையப்பன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆறுமுகம், மாவட்ட இணைச் செயலர் எஸ்.புனிதா, வட்டத் தலைவர் டி.ஜி.சுப்பிரமணியன், வட்ட பொருளர் எம்.கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments