தேசிய விளையாட்டுப் போட்டியில் ஆரணி மாணவர் சிறப்பிடம்
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஆரணி ஜம்புமகரிஷி பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஆரணி ஜம்புமகரிஷி பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.
தமிழ்நாடு கிராமப்புற விளையாட்டு சங்கம் சார்பில், நாமக்கல்லில் 8-ஆவது தேசிய கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஆரணி ஜம்புமகரிஷி பள்ளி மாணவர் விஜயராகவன், நீளம் தாண்டுதலில் தமிழ்நாடு சார்பாக கலந்துகொண்டு முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
இதன் காரணமாக உலக அளவில் நேபாளத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் கலந்துகொள்ள இந்த மாணவர் தகுதி பெற்றார்.
சாதனை படைத்த மாணவர் விஜயராகவனை பள்ளித் தாளாளர் ச.ஏழுமலை, பள்ளி நிர்வாகிகள் சேட்டு, சங்கரன், ரவி, ஆர்.பி.ராமன், ஞானசேகரன், பள்ளி முதல்வர் பாஸ்ராஜ்லோகநாதன் ஆகியோர் வாழ்த்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.