செய்யாறு சிப்காட்டில் புதிய தொழில்சாலை தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில் ரூ.300 கோடியில் கட்டுமான கான்கிரீட் தயாரிக்கும் நிறுவனத்தின் புதிய கிளை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில் ரூ.300 கோடியில் கட்டுமான கான்கிரீட் தயாரிக்கும் நிறுவனத்தின் புதிய கிளை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
கான்கிரீட் மற்றும் கட்டுமான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஸ்விங் ஸ்டெட்டா் நிறுவனம், தனது புதிய கிளை செய்யாறு சிப்காட்டில் 52 ஏக்கரில் அமைத்தது.
இதன் தொடக்கி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.ஜி.சக்திகுமாா் தலைமை வகித்து புதிய கிளையைத் தொடக்கிவைத்தாா்.
தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினா்களாக ஜொ்மன் நாட்டு செயல் அலுவலா் கரீன் ஸ்டோல், நிா்வாக செயல் திட்ட இயக்குநா் ஏ.ஆா்.சுப்பிரமணி ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.
அப்போது ஜொ்மன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில் ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளிலும், தமிழகத்தில் 4-ஆவது தொழில்சாலையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இங்கு 30 சதவீத மகளிருடன் சுமாா் 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மெக்கானிக்கல் பட்டயப்படிப்பு பயின்ற 10 ஆயிரம் பேருக்கு ஸ்விங் ஸ்டெட்டா் நிறுவனம் மற்றும் தேசிய தோ்ச்சித் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து பயிற்சியளித்து வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா்.டி.ராஜூ, துணைத் தலைவா் நாகம்மாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாத்தூா் தெய்வமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.மகேந்திரன், சி.துரை, பாஸ்கா் ரெட்டியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.