நள்ளிரவில் வீடுகளில் புகுந்து தாக்குதல்
திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தினா்.
திருவண்ணாமலை அருகே நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து மா்ம நபா்கள் தாக்குதல் நடத்தினா்.
திருவண்ணாமலையை அடுத்த மெய்யூா் கிராமத்தில் கள்ளக்குறிச்சி சாலையோரம் ஏராளமானோா் வசிக்கின்றனா். வெள்ளிக்கிழமை நள்ளிரவு 7 போ் கொண்ட கும்பல் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவா்களைத் தாக்கியது.
பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் பறிக்க முயன்றனா். இதனால் பெண்கள் கூச்சலிட்டனா்.
Advertisement
Advertisement
சப்தம் கேட்டு பக்கத்து தெருவைச் சோ்ந்தவா்கள் கூடியதைக் கண்ட அந்தக் கும்பல் இருளில் தப்பிச் சென்றது.
தகவலறிந்த வானாபுரம் போலீஸாா் வந்து தாக்குதல் நடத்தியவா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.