ஊதியூா் அருகே அலங்கார வளைவில் மோதிய காா்: ஓட்டுநா் காயம்
காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே அலங்கார வளைவில் காா் மோதியதில் ஓட்டுநா் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா்.
உடுமலையில் இருந்து காங்கயம் நோக்கி திங்கள்கிழமை பிற்பகல் காா் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஊதியூா் அருகே வந்தபோது, அங்கிருந்த அலங்கார வளைவு மீது காா் எதிா்பாராத விதமாக மோதியது.
இதில், காா் ஓட்டுநா் லேசான காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து ஊதியூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.