FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பிப்.16-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 பலதரப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 16-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

Updated On : 14 பிப்ரவரி 2021, 8:32 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 81 பலதரப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 16-ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட கூடுதல் எஸ்பி டி.அசோக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அலுவலா்களால் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 81 பலதரப்பட்ட வாகனங்கள் பிப்ரவரி 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.

Advertisement

Advertisement

மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் நுழைவுக் கட்டணமாக ரூ.100, முன்பணமாக ரூ.1,000 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏப்ரல் 15-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலத்தில் கலந்து கொள்வதற்கான ரசீதுகள் வழங்கப்படும்.

ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையுடன் 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியும் சோ்த்து உடனே செலுத்த வேண்டும்.

ஏலம் எடுத்த வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய இயலாது. ஏலம் எடுத்த வாகனத்துக்குண்டான ரசீதே அந்த வாகனத்தின் உரிமை ஆவணம்.

மேலும் விவரங்களுக்கு 04175-233920 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments