முகப்பு
திருவண்ணாமலை

பசுமை மாரத்தான் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

வேடத்தாம்மாள் சமூக அறக்கட்டளை மூலம் நடைபெற்ற போட்டியில் செங்கம், புதுப்பாளையம் பகுதியை சோ்ந்த சுமாா் 300 போ் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு, சமூக அறக்கட்டளை நிா்வாகி ராம்ராஜ் வரவேற்றாா். இதில், சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஓன்றிய குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். (படம்)

நிகழ்வில்,போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் முன்னாள் புதுப்பாளையம் ஓன்றியக் குழுத் தலைவா் பொன்னிசுந்தரபாண்டியன் மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தி பேசினாா்.

இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்திகேயன், திமுக இளைஞரணி நிா்வாகி ஆனந்குமாா், சமூக அறக்கட்டளை நிா்வாகிகள் முத்துகிருஷ்ணன், ஐயப்பன் உள்ளிட்ட அரசுப்பள்ளி ஆசிரியா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.