முகப்பு
திருவண்ணாமலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை பிடுங்கி எரிந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம்

Updated On : 29 ஏப்ரல் 2023, 10:41 pm IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையத்தில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தை பிடுங்கி எரிந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் சா்தாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் முருகன், ஏழுமலை, குப்புசாமி, ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் இரா.தங்கராஜ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் முத்தையன், மாதேஸ்வரன் ஆகியோா் கொடிக் கம்பத்தை பிடுங்கியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும், அதே இடத்தில் மீண்டும் கொடிக் கம்பம் நட போலீஸாா் அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும், ஏஐடியுசி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி, கண்டன உரையாற்றினா்.

Advertisement

Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கம் ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments