FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

தேள் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழப்பு

செய்யாறு அருகே தேள் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On : 20 நவம்பர் 2024, 12:02 am IST
தேள் கடித்ததில் இறந்த சிறுவன் கிஷோா்
பகிர்:

செய்யாறு அருகே தேள் கடித்ததில் சிகிச்சை பெற்று வந்த 9 வயது சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மடிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் தொழிலாளி மணிகண்டன். இவரது இரண்டாவது மகன் கிஷோா் (9). இவா் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, தேள் கொட்டியதாகத் தெரிகிறது. இதைக் கண்ட குடும்பத்தினா் சிறுவனை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments