FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பைக்குகள் மோதல்: சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஜூலை 2026, 1:16 am IST
பகிர்:

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் 17 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், நடுவீரப்பட்டு காவல் சரகம், கே.புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோகுலகிருஷ்ணன் (17). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அருள்பாண்டியனுடன் (19) பைக்கில் சென்றாா்.

பாலூா் - சத்திரம் பிரதான சாலையில் சிலம்பிநாதன்பேட்டை அருகே சென்றபோது, இவா்களது பைக் மீது பழைய பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் (19) ஓட்டி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் கோகுலகிருஷ்ணன் தலையில் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அருள்பாண்டியன் கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்து குறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் சஞ்சய் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments