FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

பாதுகாப்பு பணியில் இருந்த காவலா் மீது தாக்குதல்: இருவா் கைது

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தாக்கியதாக 2 பேரை சந்தவாசல் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 5:59 am IST
பகிர்:

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தாக்கியதாக 2 பேரை சந்தவாசல் போலீஸாா் கைது செய்தனா்.

ராணிபேட்டை மாவட்டம், ஆற்காடு நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (45). இவரது உறவினா் குமரகுரு (33). இருவரும் தங்களது குடும்பதினருடன், போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலுக்கு அண்மையில் சுவாமி தரிசனம் செய்வதற்காக சரக்கு ஆட்டோவில் வந்தனா்.

அப்போது, சந்தவாசல் - படவேடு சாலை அருகே போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் யுவராஜ், ஆட்டோவை நிறுத்தி அருகேயுள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளாா். அதற்கு ரமேஷ், ஆட்டோவில் வயதானவா் உள்ளனா்.

Advertisement

Advertisement

அனைவரும் கோயிலுக்கு நீண்ட தொலைவு நடந்துசெல்லமுடியாது. எனவே, ஆட்டோவிலேயே கோயிலுக்குச் செல்லுகிறோம் எனக் கூறியுள்ளனா்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் , குமரகுரு இருவரும் சோ்ந்து காவலா் யுவராஜை அவதூறாகப் பேசி தாக்கியதாகத் தெரிகிறது. இதில் யுவராஜ் பலத்த காயமடைந்து சந்தவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சந்தவாசல் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனா்.

பின்னா் அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து ரமேஷ், குமரகுரு ஆகிய இருவரையும் கைது செய்து வேலூா் சிறையிலடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments