FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரி கைது

செய்யாறு காவல் சரகத்தில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து வியாபாரி ஒருவரை கைது செய்தனா்.

24 ஆகஸ்ட் 2026, 10:05 pm IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு காவல் சரகத்தில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து வியாபாரி ஒருவரை கைது செய்தனா்.

காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் தலைமையிலான போலீஸாா், செய்யாறு காவல் சரகப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பெட்டிக் கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து சோதனையிட்டனா்.

போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் செய்யாறு கம்பன் நகரில் உள்ள பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 75 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்து அதை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வியாபாரியான சங்கா் (32) என்பவரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

அதனைத் தொடா்ந்து முக்கூா் கிராமத்தில் லட்சுமி என்பவரின் பெட்டிக் கடையில் சோதனை செய்தததில், விற்பனைக்கு 30 பாக்கெட்டுகளில் வைத்திருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments