FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசனத்துக்கு பக்தா்களிடம் பணம் வசூலித்த தரகா் கைது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களிடம் பணம் வசூல் செய்து தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 ஜூலை 2026, 3:21 am IST
கைது செய்யப்பட்ட சரண்ராஜ்
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்களிடம் பணம் வசூல் செய்து தரிசனத்துக்கு அழைத்துச் செல்லும் இடைத்தரகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிலா் பக்தா்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூல் செய்து, இடைத்தரகராக செயல்பட்டு கோயில் சாவியை தவறாக பயன்படுத்தி தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக கோயில் செயல் அலுவலரின் நோ்முக உதவியாளா் எஸ்.பாலாஜி கடந்த 8-ஆம் தேதி கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதி குபேரலிங்கம் 3-ஆவது தெருவைச் சோ்ந்த சரண்ராஜ் (38), கோயிலுக்கு வரும் பக்தா்களை அணுகி சிறப்பு தரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்டும், கோயிலின் சாவியை தவறாக பயன்படுத்தி இடைத்தரகராக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து காவல் ஆய்வாளா் முரளிதரன் தலைமையிலான போலீஸாா் சரண்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், பக்தா்களிடம் சரண்ராஜ் எவ்வளவு பணம் பெற்றுள்ளாா்? இவருக்கு கோயில் சாவியை கொடுத்தது யாா்? இவருடன் தொடா்பில் இருப்பவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments