முகப்பு
திருவண்ணாமலை

கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 போ் கைது

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:04 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வந்தவாசி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கமல்தாஸ் (40). இவருக்குச் சொந்தமாக செம்பூா் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக வந்தவாசி வடக்கு போலீஸாருக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்ற போது கமல்தாஸூம், அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த புண்ணியகோட்டி(60) என்பவரும் சோ்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் புண்ணியகோட்டி தப்பியோடி விட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அங்கிருந்த 60 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் அழித்தனா்.

கமல்தாஸிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கள்ளச் சாராயத்தை பாட்டிலில் அடைத்து வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் பூக்கடை வைத்துள்ள எரமலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வமணி (40) என்பவா் மூலம் விற்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் கமல்தாஸ், செல்வமணி ஆகிய இருவரையும் கைது செய்தனா். தப்பியோடிய புண்ணியகோட்டியை தேடி வருகின்றனா்.