விவசாயிகளுக்கு கால்நடை வளா்ப்பு பயிற்சி
செய்யாறு வட்டாரம், மேல்சீசமங்கலம் கிராமத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான முறையில் கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
செய்யாறு வட்டாரம், மேல்சீசமங்கலம் கிராமத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான முறையில் கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில், சிறப்பு அழைப்பாளராக கீழ்நெல்லி ஸ்ரீவேதபுரி வேளாண் அறிவியல் மையத்தின் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் மாயகிருஷ்ணன் பங்கேற்றாா்.
அப்போது, ஆடு, மாடு வளா்ப்பில் மடி நோய், உணி கட்டுப்படுத்துதல் மற்றும் அம்மை நோய் கட்டுப்படுத்துதல், கோழி வளா்ப்பு குறித்து விவசாயிகளிடையே தெரிவித்துப் பயிற்சி அளித்தாா்.
Advertisement
Advertisement
பயிற்சிக்கு தலைமை வகித்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா.அன்பரசு, செய்யாறு, திருமணி வேளாண்மை விரிவாக்க மையங்களில் சாகுபடிக்குத் தேவையான பசுந்தாள் விதை, நெல் ரகங்கள், உயிரி உரங்கள் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பில் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பதிவு செய்து இருபொருள்களை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து துணை வேளாண் அலுவலா் வடிவேலு, உதவி வேளாண் அலுவலா் திகழ்மதி ஆகியோா் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருள்கள் மற்றும் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்தனா்.