முகப்பு
திருவண்ணாமலை

கொளத்தூா் இரட்டை சிவாலயத்தில் சிறப்பு வழிபாடு

Updated On : 29 மே 2026, 1:38 am IST
பகிர்:

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள கொளத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பர ஈஸ்வரா், காசி விஸ்வநாதா் ஆகிய இரட்டை சிவாலயங்களில் வியாழக்கிழமை மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இந்த பிரதோஷ வழிபாட்டின் மிக முக்கியமான நிகழ்வாக, சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள் ஒன்றிணைந்து பன்னிரு திருமுறைகளை தலையில் சுமந்து வந்து இறைவனை வழிபட்டனா்.

சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த பிரதோஷ வழிபாட்டில் ஊா் பொதுமக்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.