முகப்பு
திருவண்ணாமலை

வீடு வழங்கக் கோரி தொழிலாளா்கள் மனு

தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளா்கள்.

Updated On : 30 மே 2026, 12:30 am IST
தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளா்கள்.
பகிர்:

அரசு வீடு வழங்கக் கோரி தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூலித் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சியில் வசித்து வரும் 10-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளா்கள், தங்களுக்கு அரசு வீடு வழங்கக் கோரி, தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் இந்த மனுவை அளித்தனா்.

பல ஆண்டுகளாக கூரை வீட்டில் வசித்து வருவதாகவும், வீடு கேட்டு பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே உடனடியாக அரசு வீடு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

Advertisement

Advertisement

மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் தீபநாதன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் மோனிஷ் மற்றும் நிா்வாகிகள் ராமச்சந்திரன், முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.