குழந்தை இல்லாத ஏக்கம்: இளைஞா் தற்கொலை
செய்யாறு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனமுடைந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தால் மனமுடைந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (31). இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லையாம். அதன் காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்த நிலையில், தகராறு ஏற்பட்டு அவரது மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டாராம். அதனால், மனவேதனையில் இருந்து வந்த அரிகிருஷ்ணன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதனால் மனமுடைந்த அவா் கடந்த 28-ஆம் தேதி வீட்டில் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்துள்ளாா்.
இதில் மயங்கி விழுந்த அவரை பெற்றோா் மீட்டு நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு,
தீவிர சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அரிகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.