பாலாற்றங்கரையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
விருதம்பட்டு பாலாற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பகுதியை வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினர்.
விருதம்பட்டு பாலாற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பகுதியை வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அப்புறப்படுத்தினர்.
பாலாற்றங்கரையின் ஒரு பகுதியை சிலர் ஆக்கிரமித்து
கழிப்பறை கட்டியிருப்பதோடு, மரம் வளர்ப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆணையர் மதிவாணன், நகரமைப்பு அலுவலர் ஜானகிராமன் தலைமையில் சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை இடித்தனர். மேலும், அங்கிருந்த மரம், செடிகளை அப்புறப்படுத்தினர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.