ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே கடத்தப்பட இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே கடத்தப்பட இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் ரயில்வே கேட் அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயிலில் சிலர் ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டிந்தனர். அப்போது, அவ்வழியாகச் சென்ற நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் உடனடியாக ரயில் அருகே சென்றார்.
அவரைப் பார்த்த கடத்தல் நபர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை அங்கேயே விட்டு, தப்பிச் சென்றனர்.
பின்னர் 28 மூட்டைகளில் இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டு, நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.