FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

அனுமதியின்றி ஓட்டல்களில் பயன்படுத்திய 15 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி ஓட்டல், தேனீர் கடைகளில் பயன்படுத்திய வீட்டு உபயோக 15 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Updated On : 8 ஜூன் 2018, 12:42 am IST
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே அனுமதியின்றி ஓட்டல், தேனீர் கடைகளில் பயன்படுத்திய வீட்டு உபயோக 15 கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம், பச்சூர், டோல்கட் ஆகிய பகுதிகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள்  ஓட்டல் மற்றும் தேனீர் கடைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார் தலைமையில் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி மற்றும் வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெலகல்நத்தம் பச்சூர், டோல்கட் ஆகிய பகுதிகளில் முறைகேடாக பயன்படுத்திய வீட்டு உபயோக 15 கேஸ்  சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலிண்டர்கள் திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments