மர்மக் காய்ச்சல்: கணவன், மனைவி சாவு
குடியாத்தம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
குடியாத்தம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
குடியாத்தத்தை அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நகைத் தொழிலாளி டி. அரி (33). இவரது மனைவி ரோஜா(27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனராம்.
இந்நிலையில், தீவிர சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கிராமத்தில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.